கொழும்பில் நாளை 21 மணிநேர நீர்வெட்டு

water cut
water cut

கொழும்பின் சில பகுதிகளில் நாளை 21 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாளை (10) காலை 9 மணி முதல் ஞாயிற்றுக் கிழமை (11) 6 மணி வரையில் இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

கொழும்பு 01, 02, 03, 07, 08, 09, 10 மற்றும் 11 ஆகிய பகுதிகளில் இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்துடன் கொழும்பு 04 மற்றும் 12 ஆகிய பகுதிகளில் குறித்த காலப்பகுதியில் குறைந்த அழுத்தத்திலேயே நீர் விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.