வவுனியா தாண்டிக்குளம் ஏ9 வீதிக்கரையில் அமைக்கப்பட்டிருந்த அனுமதியற்ற வியாபார நிலையங்கள் இன்று (09) அகற்றப்பட்டது
குறித்த பகுதியில் ஏ9 வீதி மற்றும் தொடருந்து பாதைக்கு அருகாமையில் உள்ள பகுதிகளில் சிலரால் தற்காலிக கொட்டில்கள் அமைக்கப்பட்டு வியாபார செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டதுடன் சுற்று வேலிகளும் அமைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று காலை குறித்த பகுதிக்குச் சென்ற வவுனியா பிரதேச செயலாளர் நா.கமலதாசன் தலைமையிலான குழுவினர் குறித்த பகுதியில் அமைக்கப்பட்டிருந்த அனுமதியற்ற வியாபார நிலையங்களை அகற்றியதுடன், சுற்று வேலிகளையும் அகற்றி சென்றனர்.