யாழில் நாளை மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்

IMG 20210709 WA0016
IMG 20210709 WA0016

யாழில் அரசாங்கத்துக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம் நாளை இடம்பெற உள்ளதாக புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் பொது செயலாளர்  சி.க.செந்தில்வேல் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே சி.க.செந்தில்வேல் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஒன்றரை வருடங்களுக்கு முன்பு புதிய ஜனாதிபதி ஆட்சிக்கு வந்தபோது மிகப்பெரிய வாக்குகளைப் பெற்று ஜனாதிபதி ஆகிவிட்டேன் என்று பெருமிதம் கொள்ளப்பட்டது. அதை தொடர்ந்து வந்த நாடளுமன்ற தேர்தலில் மக்களுடைய ஆதரவினை முழுமையாக பெற்று விட்டோம் என சொன்னார்கள்

எனினும் இந்த நாட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே பிரதமராக ஜனாதிபதியாக காணப்படுகின்றார்கள்.

தற்பொழுது நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் காணப்படுகின்றன . அத்தியாவசியப் பொருட்கள், எரி பொருள் பொதுமக்கள் கொள்வனவு செய்ய முடியாத அளவிற்கு விலை ஏற்றம் காணப்படுகின்றது.

இன்று ஒரு கிலோ அரிசியினுடைய விலை 150 ரூபாவாக காணப்படுகின்றது. சீனி ஒரு கிலோ 130 ரூபாவாக காணப்படுகின்றது எங்கள் நாட்டினுடைய உணவுத் தேவையின் தானிய வகைகளின் விலைகளும் உயர்வடைந்து காணப்படுகிறது.

எனவே மக்களினுடைய உரிமைகளைப் பாதுகாப்பதற்காக நாம் குரல் கொடுப்பதற்கு தயாராகி வருகின்றோம். எமது நாட்டு வளங்கள் அந்நிய நாடுகளுக்கு விற்கப்படுகின்றன.

நாளைய தினம் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி பொதுமக்களுடன் இணைந்து அரசாங்கத்திற்கு எதிரான குரலை கொடுக்க உள்ளோம் என தெரிவித்துள்ளார்.