150 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து இருவர் பலி

Covid Death
Covid Death

நவகமுவ – வெக்கவத்த கல்குவாரி ஒன்றில் பணிபுரிந்து வந்த இருவர் 150 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளனர்.

இன்று காலை கல்குவாரிக்கு வெடி வைக்க முயற்சித்த போதே இவர்கள் வழுக்கி வீழ்ந்து உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் 40 மற்றும் 42 வயதுகளையுடைய கொரதொட மற்றும் எட்டியாந்தோட்டை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது.