ஆசிரியர் சங்க செயலாளர் உள்ளிட்ட 11 பேர் முல்லைத்தீவில் தனிமைப்படுத்தல்

IMG 20210709 WA0014 1
IMG 20210709 WA0014 1

நேற்று கொழும்பில் நாடாளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அண்மையில் இடம்பெற்ற போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட தேரர்,இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் உள்ளிட்ட 11 பேர் முல்லைத்தீவு விமானப்படை தனிமைப்படுத்தல் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

உடுத்திய உடுப்போடு சரியான உணவோ சுத்தமான குடிநீரோ தமக்கு கிடைக்கவில்லை எனவும் தனிமைப்படுத்தல் விதிகளை பயன்படுத்தி தம்மை வேண்டும் என்றே தண்டிப்பதாகவும் விசனம் தெரிவித்துள்ளனர்.