வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 59வயது பெண்மணி ஒருவர் கொவிட் தொற்று நோயால் இன்று (09) மரணமடைந்துள்ளார்.
குறித்த பெண் சுகவீனம் காரணமாக கடந்த மாதம் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவருக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று பீடித்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.
இதனையடுத்து வவுனியா வைத்தியசாலையின் கொரோனா விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் இன்றையதினம் குருதிச்சுத்திகரிப்பு பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர் மரணமடைந்துள்ளார்