சிலாபம் நகரசபை தவிசாளர் உள்ளிட்ட இருவர் கைது

kaithu
kaithu

இருவரை தாக்கிய குற்றச்சாட்டில் சிலாபம் நகரசபை தவிசாளர் துஷான் அபேவிக்ரம உள்ளிட்ட இருவர் சிலாபம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாக்கப்பட்ட இருவரும் சிலாபம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட இருவரும் இன்று(12) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.