தற்போது சுகாதார அமைச்சின் செயலாளராக செயற்படும் பீ.எஸ்.எம்.சாள்ஸ், வட மாகாண ஆளுநராக நியமிப்பதில் இழுபறிக்கான காரணம், ஓய்வூதியம் தொடர்பான விவகாரம் என தெரிவிக்கப்படுகிறது.
சுகாதார அமைச்சின் செயலாளராக பி.எஸ்.எம்.சார்ள்ஸ் பதவிஉயர்வு பெற்றிருந்தார். அந்த பதவியை பெற்று ஒரு மாதம் பூர்த்தியாவதற்குள் ஆளுநர் பதவியை வகிக்கும் பட்சத்தில் அவரின் எதிர்கால ஓய்வூதியத்தினை பெற்றுக்கொள்வதில் பாதிப்பினை ஏற்படுத்தும் என கருதி வட மாகாண ஆளுநராக அவர் பதவியேற்பதில் தாமதம் நிலவியது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது அவருக்கு முழுமையான ஓய்வூதியம் வழங்கும் வகையில் குறித்த நியமனத்தினை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அவதானம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.