தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மேலும் 190 பேர் கைது

curfew check 1 768x384 1
curfew check 1 768x384 1

தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் மேலும் 190 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த குற்றச்சாட்டுக்காக கடந்த ஒக்டோபர் 30 முதல் இதுவரையான காலப் பகுதியில் மொத்தம் 49,449 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.