எதிர்கட்சியுடன் இணைந்து கொள்ள ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி தயாராக இல்லை

ஜே.சி அலவத்துவல
ஜே.சி அலவத்துவல

பிரச்சினைகள் இருப்பினும் அரசாங்கத்தில் இருந்து விலகி எதிர்கட்சியுடன் இணைந்து கொள்ள ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி தயாராக இல்லை என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கீழ் மட்டத்தில் சுதந்திக கட்சி உறுப்பினர்கள் முகங்கொடுக்கும் சிக்கல்கள் தொடர்பில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைவர்களுடன் கலந்துரையாடி தீர்மானத்திற்கு வர உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை சிக்கல்களுக்கு மத்தியில் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்களுக்கு நேரடியாக தீர்மானம் எடுக்க முடியாமல் உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி அலவத்துவல தெரிவித்துள்ளார்.