மஸ்கெலியா பிரதேச சபையின் உறுப்பினர்கள் போராட்டம்

11 6 720x375 1
11 6 720x375 1

மஸ்கெலியா பிரதேச சபையின் எதிரணி உறுப்பினர்கள், போராட்டமொன்றினை இன்று (12) முன்னெடுத்துள்ளனர்.

மஸ்கெலியா பிரதேச சபைக்கு முன்பாக, சுகாதார நடைமுறைகளை பின்பற்றி அவர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

அதாவது அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம், எரிபொருட்களின் விலை ஆகியவற்றினை உடனடியாக குறைக்குமாறும் தொழிற்சங்க தலைவர்கள் கைது செய்யப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்தும் மலையகத்தில் தடுப்பூசி திட்டத்தை துரிதப்படுத்துமாறு வலியுறுத்தியுமே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.