இராணுவத்தினரால் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீடு இன்று கையளிக்கப்பட்டது.
குறித்த நிகழ்வு இன்று காலை 11 மணியளவில் இடம்பெற்றது.
கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வட்டக்கச்சி பகுதியில் வாழும் கூலித்தொழிலாளி குடும்பமான இராசையா இராயேஸ்வரன் என்ற 4 அங்கத்தவர்கள் கொண்ட குடும்பத்திற்கு குறித்த வீடு வழங்கப்பட்டுள்ளது
குறித்த நிகழ்வில் கரைச்சி பிரதேச செயலாளர் பா.ஜெயகரன்,கண்டாவளை பிரதேச செயலாளர் பிருந்தாகரன், 57வது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.