முல்லைத்தீவு – பழைய செம்மலை, நீராவியடிப் பிள்ளையார் ஆலய வருடாந்த பொங்கல் விழா நாளை இடம்பெறவுள்ளது.
இதற்கான அனுமதியினை கரைத்துறைப்பற்று பிரதேச செயலகம் வழங்கியுள்ளது.
இதன்படி, இந்த பொங்கல் விழாவில் 10 பேர் மாத்திரமே கலந்து கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 அச்சுறுத்தல் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கரைத்துறைப்பற்று பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது.