வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று கிளிநொச்சியில் இடம் பெற்றுள்ளது.
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் இன்று முற்பகல் இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தமது பிள்ளைகளின் விடுதலையை வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பல மாவட்ட்ங்களிலிருந்து வருகை தந்திருந்தவர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
கிளிநொச்சியுள்ள காணாமலாக்கப்பட்ட உறவுகளின் உறவினர்கள் எதிர்வரும் 30ம் திகதி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்க இருந்தனர்.இந்த நிலையில் குறித்த அமைப்பினர் இன்று தமது போராட்டத்தை கிளிநொச்சியில் முன்னெடுத்துள்ளனர்.
கிளிநொச்சியிலுள்ள காணாமலாக்கப்பட்ட சங்கத்தினருக்கு தாங்கள் எதிரானவர்கள் அல்ல என்றும் போராட்டத்தில் ஈடுப்பட்டோர் கருத்து தெரிவித்தனர் .
சமீப காலமாக காணாமலாக்கப்பட்ட உறவுகளின் உறவினர்கள் இவ்வாறு கிளையாக பிரிந்து குழு குழுவாக போராட்டங்களை நடாத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.