ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியுதீனிடம் விசாரணை

haheem and risath
haheem and risath

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பாக முன்னாள் அமைச்சர்கள் ரவூப் ஹக்கீம் மற்றும் ரிசாத் பதியுதீன் ஆகியோரிடம் வாக்குமூலம் பதிவு செய்ய குற்றவியல் புலனாய்வுத் துறை தயாராக இருப்பதாக துணை சொலிசிட்டர் ஜெனரல் திலீபா பீரிஸ் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமையின் காரணமாக கொலை குற்றம் புரிந்த குற்றச்சாட்டில் பதவிவிலக்கப்பட்ட முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகியோரின் வழக்குகள் இன்றைய தினம் எடுத்துக்கொள்ளப்பட்ட வேளை பதில் சொலிசிட்டர் ஜெனரல் இந்த தகவலை வெளியிட்டார்.

இந்நிலையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய சஹ்ரானுடன் முன்னாள் அமைச்சர்கள் ரவூப் ஹக்கீம் இருந்த ஆதாரம் ஜனாதிபதி தேர்தல் காலத்தில் பரவலாக பேசப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.