சிறுமி பாலியல் விவகார விசாரணைகள் நிறுத்தப்பட கூடாது – ஐக்கிய மக்கள் சக்தி

download 2 21
download 2 21

நாடளாவிய ரீதியில் மிகமுக்கிய பேசுபொருளாக மாறியிருக்கின்ற இணையத்தளத்தின் ஊடாக 15 வயதுச்சிறுமியொருவர் விற்பனை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் பலர் அடையாளங்காணப்பட்டிருக்கும் நிலையில், இவ்வழக்கு விசாரணைகள் நிறுத்தப்படவுள்ளதாக சமூகவலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இச்சம்பவம் தொடர்பான விசாரணைகள் இடைநிறுத்தப்படக்கூடாது என ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியள்ளது.

அதுமாத்திரமன்றி கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட நால்வரும் எதனடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார்கள்? என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன கேள்வி எழுப்பியுள்ளார்.

அதுமாத்திரமன்றி தேசிய பாதுகாப்பென்பது வெறுமனே இராணுவ ரீதியான பாதுகாப்பை மாத்திரமல்ல. மாறாக இந்நாட்டில் வாழும் பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட அனைத்துப் பொதுமக்களினதும் பாதுகாப்பை உள்ளடக்கியது என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ளவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.