மன்னாரில் பதிவு செய்யப்பட்ட கலா மன்றங்களுக்கு இசைக்கருவிகள் வழங்கி வைப்பு

h3
h3

மன்னாரில் பதிவு செய்யப்பட்ட கலாமன்றங்களுக்கு இசைக்கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.

நேற்று (12), மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல் தலைமையில், மாவட்டச் செயலகத்தில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது மன்னார் மாவட்டத்தில், பதிவு செய்யப்பட்டுள்ள 6 கலாமன்றங்களுக்கு இசைக்கருவிகள் வழங்கி வைக்கப்பட்டன.

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் சுஜீவா சிவதாஸுனால் இந்த இசைக்கருவிகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.