கல்குடாவில் நினைவேந்தலில் ஈடுபட்டோருக்கு 27ம் திகதிவரை விளக்கமறியல்

images 11
images 11

மட்டக்களப்பு கல்குடா கடற்கரையில் முள்ளிவாய்கால் நினைவேந்தலில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக பயங்கரவாத தடைச் சட்டத்தின்க கீழ் கைது செய்யப்பட்ட 10 பேரையும் தொடர்ந்து எதிர்வரும் 27ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற நீதவான் இன்று செவ்வாய்க்கிழமை (13) உத்தரவிட்டார்.

கடந்த மே மாதம் 18 ம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் செய்வதற்கு எதிராக லவக்குமாருக்கு நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்ட நிலையில் அவர் உட்பட 10 பேர் அன்றைய தினம் நீதிமன்ற தடை உத்தரவை மீறி கல்குடா காவல்துறை பிரிவிலுள்ள நாகர்வட்டை கடற்கரையில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கு தீபச் சுடர் ஏற்றி கடலில் பூக்களைத் தூவி அஞ்சலி செலுத்தி அதனை படம் எடுத்து முகநூலில் பதிவு செய்த நிலையில் அவர்களை பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் கல்குடா காவல்துறையினர் கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்ற அனுமதியினை பெற்று 3 நாள் காவல்துறை தடுப்பு காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட் நிலையில் அவர்கள் தொடர்ந்து விளக்கமறியல் வைக்கப்பட்டிருந்தனர்.

இதனையடுத்து இன்று செவ்வாய்கிழமை (13) குறித்த வழக்கு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் விசாரணைக்காக எடுக்கப்பட்ட போது குற்றம்சாட்டப்பட்வர்கள் 10 பேரின் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி இரட்ணவேல் தலைமையில் கனகரத்தினம் சுகாஸ் ஆகியோர் ஆஜராகிய நிலையில் நிலையில் கொரோனா தொற்று காரணங்களால் நீதிமன்றத்துக்கு அழைத்துவர முடியாத நிலையில் அவர்களை தொடர்ந்தும் 27 திகதிவரை 14 நாட்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.