வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த வவுனியா போக்குவரத்துச் சாலைக்கு சொந்தமான பேருந்து ஈரப்பெரியகுளம் சோதனைச் சாவடியில் திருப்பி அனுப்பப்பட்டது. அத்தியாவசிய தேவைகளின்றி பயணித்தவர்களை ஏற்றி சென்றதன் காரணமாக குறித்த பேருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் ஊழியர்கள் மாகாணங்களுக்கு இடையில் பேருந்துகளில் பயணிப்பதற்கு இன்று முதல் மட்டுப்படுத்தப்பட்டளவில் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இதன்படி இன்று (14) காலை வவுனியா புதிய பேருந்து நிலையப்பகுதியில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற அரச பேருந்து ஈரப்பெரியகுளம் சோதனைச் சாவடியில் வழிமறிக்கப்பட்டு சோதனைக்குட்படுத்தப்பட்டது. இதன்போது பேருந்தில் பயணித்தவர்களில் அத்தியாவசிய தேவை நிமிர்த்தம் செல்கின்றமையை உறுதிப்படுத்த தவறியுள்ளனர்.
இதனால் குறித்த பேருந்து ஈரப்பெரியகுளத்தில் வைத்து மீண்டும் வவுனியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.