ஓட்டமாவடியில் உலர் உணவு பொருட்கள் வழங்கி வைப்பு

01 10
01 10

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் கொரோனா பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தினால் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் வீ.தவராஜாவின் வழிகாட்டலில் பயணத்தடை காரணமாக பாதிக்கப்பட்ட பெண்கள் தலைமை தாங்கும் குடும்பம் மற்றும் விசேட தேவையுடைய குடும்பங்களுக்கு ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் வைத்து உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டது.

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் வீ.தவராஜா தலைமையில் நடைபெற்ற உலர் உணவு வழங்கும் நிகழ்வில் கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தின் பணிப்பாளர் எம்.எல்.எம்.புஹாரி, கிராம அதிகாரிகள், அபிவிருத்தி மையத்தின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.