சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டவர்களை பார்வையிட ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச இன்று விஜயம் செய்துள்ளார்.
வெள்ளப்பெருக்கினால் அனர்த்தத்திற்குள்ளான மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்கள் தொடர்பாக கண்டறிவதற்காகவே ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச இன்று அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்டத்தின் சில பிரதேசங்களுக்கு கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டார்
அத்தோடு, இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான நலன்பேணல் நடவடிக்கைகளை துரிதமாகவும் தொடர்ச்சியாகவும் முன்னெடுத்துச் செல்லுமாறு ஜனாதிபதி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்
மக்களின் சமூகநலன் திட்டங்கள் பலவற்றுக்கும் இவ்வாறு ஜனாதிபதி விஜயம் செய்கின்றமை குறிப்பிடத்தக்கது .