பூநகரி பிரதேசத்திற்கு நாளை நீர் விநியோகத் தடை!

water cut
water cut

பூநகரி பிரதேசத்திற்கு நாளை 21 ஆம் திகதி நீர் விநியோகம் தடைப்படும் என கிளிநொச்சி பிராந்திய பொறியியலாளர் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,
பூநகரி நீர் விநியோகத்திற்காக பூநகரி நீர் தாங்கியினை கிளிநொச்சி நீர் தாங்கியுடன் இணைப்பதற்கான வேலைத்திட்டம் நாளை காலை 6.00  am (21.07.2021) முதல் மறுநாள் காலை 6.00 am (22.07.2021) வரை நடைபெற உள்ளது. 

எனவே குறித்த பூநகரி நீர் வழங்கல் திட்டத்தினூடான நீர் வழங்கல் செயற்பாடுகள் 21.07.2021, புதன் கிழமை  காலை 6.00  தொடக்கம் முதல் 24 மணித்தியாலங்கள் தடைப்பெற்று இருக்கும். மேலும்  மறுநாள் வியாழன்  காலை  6.00 மணிமுதல் வழங்கல் செயற்பாடுகள் வழக்கம் போல் இடம்பெறும் என தெரிவித்துள்ளார்.