தீர்வை வரியின்றி சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட, 3,400 சிகரெட்டுக்களுடன், வத்தளையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் இதனைத் தெரிவித்துள்ளது.
பேலியகொடை – மேல்மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள், வத்தளை பகுதியில் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள், கொழும்பு 10 மற்றும் கொழும்பு 12 பகுதிகளைச் சேர்ந்த, 31 மற்றும் 42 வயதுடையவர்கள் என காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.