தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 152 பேர் கைது

thanimai 1
thanimai 1

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 152 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதனடிப்படையில் இதுவரை 51,733 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

45,000 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும், 6,000 பேருக்கு எதிராக எதிர்வரும் வாரங்களில் வழக்கு தொடரவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அதேநேரம் முகக்கவசமின்றி பொதுமக்கள் நடமாடும் பகுதிகள் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

அதனை கண்காணிப்பதற்காக 30 காவல்துறை குழுக்கள் நியமிக்கப்பட்டு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் காவல்துறை பேச்சாளர் குறிப்பிட்டார்.