சண்முகராஜா மயூரன் அவர்களது மகளான மயூரன் கைலாஷாவின் பிறந்தநாளையிட்டு 20 மரங்கள் திருக்கோணேசர் மான் பூங்காவில் நடப்பட்டது
திருக்கோணேசர் மான் பூங்காவில் ஏற்கனவே சில வகை மரங்களான, புங்கை, நாவல், வேம்பு, இலுப்பை எனும் பயன் தரும் போதுமான மரங்கள் நடப்பட்டுள்ளதால், அங்கு இல்லாத அத்தி, கூளா, பாலை, தவிட்டை, ஆல் போன்ற மரங்கள் நடுவதற்கு தீர்மானித்துள்ளதாக எதிர்காலத்திற்கான பசுமையான உலகம் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்
குறித்த நிகழ்வில் பசுரம நேய நண்பர்களான திரு.சி.சசிகுமார் ஆசிரியர், நமக்காக நாம் பசுமை அமைப்பு உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.