கருணாவை கொட்டித்தீர்க்கும் அதாவுல்லாவின் சகா!

download 2 4
download 2 4

கண்களை இறுக மூடிக்கொண்டு உலகம் இருட்டிவிட்டதாக நினைத்து கருணா செயற்படுகிறார் என தேசிய காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்பு இணைப்பாளர் யூ.எல்.என். ஹுதா உமர் இன்று கல்முனையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பேசும் போது தெரிவித்தார்.

தேசிய காங்கிரஸின் தலைவர் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா தமிழ் மக்களின் 2000 ஏக்கா் காணிகளை இரவோடிரவாக அபகரித்து விட்டதாக பாரிய அளவிலான குற்றச்சாட்டு ஒன்றை தமிழ் மக்கள் மத்தியில் உரையாற்றிய முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்திருந்தார். ,

தமிழ் மக்களினால் காட்டி கொடுப்பாளராகவும், தமிழின அழிப்பு துரோகியாகவும் அடையாளப்படுத்தப்பட்ட முன்னாள் பிரதி அமைச்சர் கருணாவின் அண்மைய கால கருத்துக்கள் முஸ்லிம்களையும், முஸ்லிம் தலைமைகளையும் வெகுவாக தாக்குவது போன்று அமைந்துள்ளது. எதிர்வரும் பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பெற வேண்டும் என்பதை காரணமாக கொண்டு இவ்வாறான காட்டுமிராண்டி அறிக்கைகளை விடுகிறார் என அவர் மேலும் கூறியுள்ளார்