சுகவீனம் காரணமாக உயிரிழந்த கப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் தலைவர் ஆர்.ஜி.மகேந்திரனுக்கு வவுனியா காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர்.
அவர்கள் போராட்டம் மேற்கொள்ளும் பகுதியில் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது அவரது படத்திற்கு ஒளிதீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
அமரர் ஆர்.ராஜமகேந்திரனுக்கு வணக்கம் செலுத்துகிறோம். அவர் இலங்கையில் ஊடக அறத்தின் தூண். செய்தி மற்றும் தகவல்களை சேகரித்தல், மதிப்பீடு செய்தல், உருவாக்குதல் மற்றும் முன்வைத்தல் ஆகியவற்றின் செயல்பாடுதான் ஊடகத்துறையின் முக்கிய கடமை என்று அவர் எப்போதும் செயற்பட்டார்.
ஊடகங்களின் நோக்கமான குடிமக்களின் வாழ்க்கை, அவர்களின் சமூகங்கள் மற்றும் அரசாங்கங்கள் குறித்து சிறந்த முடிவுகளை எடுப்பதற்காக தேவையான தகவல்களை வழங்கி அவர் வழிகாட்டினார் என்றனர்.