ஹிஷாலினி மரணம்; கொட்டகலையில் போராட்டம்

123456789 1
123456789 1

கொட்டகலை- திம்புள்ள தோட்டத்தில், சிறுமி ஹிஷாலினியின் மரணத்துக்கு நீதி கோரி பாரிய போராட்டமொன்று இன்று (27) முன்னெடுக்கப்பட்டது.

தலவாக்கலை, நாவலப்பிட்டி, திம்புள்ள பகுதியிலுள்ள அம்மன் ஆலயத்துக்கு முன்பாக அப்பகுதியிலுள்ள பெருந்தோட்ட தொழிலாளர்களால் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிறுமியின் மரணத்துக்கான காரணம் கண்டறியப்பட வேண்டும், தரகர் முதல் சிறுமியை வேலைக்கு அமர்த்தியவர்கள் வரை அனைவருக்கும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர்.