வாடகைக்கு பெற்றுக் கொண்ட வாகனங்களை விற்பனை செய்த நபர் கைது!

kaithu
kaithu

வாடகைக்கு வாகனங்களை வழங்கும் நிறுவனங்களிடமிருந்து வாகனங்களை பெற்று அவற்றை விற்பனை செய்து வந்த நபர் ஒருவர் நுகேகொடை குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கண்டி பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.