கடந்த 20 ஆண்டுகளில் நாட்டில் வாய்ப்புற்று நோயாளிகளின் எண்ணிக்கை 09 மடங்கு அதிகரித்துள்ளது என்று சுகாதார அமைச்சின் தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
பாக்கு பயன்பாடே இதற்கு முக்கிய காரணம் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
வாய்ப்புற்று நோயை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சையளிப்பதன் மூலம் நோய் பரவுவதைத் தடுக்க முடியும் என தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டுப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.