முல்லைத்தீவில் இன்று கவனயீர்ப்பு போராட்டம்

vlcsnap 2021 07 27 14h08m21s293
vlcsnap 2021 07 27 14h08m21s293

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு காவல்துறை பிரிவுக்குட்பட்ட றெட்பானா சந்திப்பகுதியில் நான்கு கிராமங்களை சேர்ந்த மக்கள் சிறுமியின் உயிரிழப்பிற்கு நீதிகோரியும் சிறுவர்கள்,பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு எதிராகவும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்

மாணிக்கபுரம்,இளங்கோபுரம்,வள்ளுவர்புரம்,பாரதிபுரம் கிராமத்தினை சேர்ந்த மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தினர் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளதுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாரதி வட்டார இணைப்பாளர் வே.தியாகராசா அவர்களின் ஒழுங்கமைப்பில் இந்த கவனயீர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.