வெலிக்கடைச் சிறைப் படுகொலையின் 38 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு முல்லைத்தீவு மாவட்ட தமிழீழ விடுதலை இயக்கத்தின் கட்சி அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ஏற்பாட்டில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் ஆண்டிஐயா புவனேஸ்வரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது உயிரிழந்தவர்களின் படத்திற்கு சுடர் ஏற்றி மலர்மாலை அணிவித்து மலர்தூவி அகவணக்கம் செலுத்தி வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.
இதில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வினோ நோகராதலிங்கம்,கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் க.விஜிந்தன், புதுக்குடியிருப்பு பிரதேச சபை உப தவிசாளர் க.ஜெனமேஜெயந் உள்ளிட்ட கட்சியின் உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்துள்ளார்கள்.