நாடாளுமன்ற உறுப்பினர் தலைமையில் கள உத்தியோகத்தர்களுக்கான கூட்டம்!

IMG 20210728 WA0052
IMG 20210728 WA0052

வவுனியா பிரதேச செயலகத்தில் இன்று கள உத்தியோகத்தர்களுக்கான கலந்துரையாடல் இடம்பெற்றது.

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமாகிய கு.திலீபன் தலைமையில் இடம்பெற்ற இவ் கலந்துரையாடலில் கிராமப்புறங்களில் இடம்பெறுகின்ற வன்முறைகள், போதைப்பொருள் பாவனை மற்றும் சிறுவர் துஷ்பிரயோகம், சிறுவர்களை வேலைக்கு அமர்த்துதல், சமுர்த்தி கொடுப்பனவு போன்ற விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

இக் கலந்துரையாடலில் வவுனியா பிரதேச செயலாளர் நா.கலதாசன், கிராமசேவை உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.