உயர் நீதிமன்ற நீதியரசர் பிரசன்ன ஜெயவர்தன, கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையில் இன்று காலை காலமானார்.
2017ஆம் ஆண்டு ஜனவரியில் இலங்கை மத்திய வங்கி பிணை முறி மோசடி விசாரணைக்கான ஜனாதிபதி ஆணைக்குழுவின் உறுப்பினராக நீதியரசர் பிரசன்ன ஜெயவர்தன முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.