நத்தார் பண்டிகை பாதுகாப்பு உறுதி !

1 ff
1 ff

நத்தார் பண்டிகைக் காலப்பகுதியில் பொது மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக இராணுவத் தளபதி லெப்டினர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இராணுவத் தளபதி பத்தரமுல்ல டென்ஸில் கொப்பேகடுவ வீதியில் இரு மருங்கிலும் அலரி மரக்கன்றுகளை நடும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது. இதன்போது கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் கூறியுள்ளார்.

முப்படை மற்றும் பொலிஸார் இதற்கு தேவையான ஆகக்கூடிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

இது தொடர்பான ஆலோசனைகளை ஜனாதிபதி பாதுகாப்பு பேரவை கூட்டத்தின் போது தமக்கு வழங்கியதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.