திருகோணமலையில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் பலி

Death body 720x450 1
Death body 720x450 1

திருகோணமலை ஹொரவபொத்தானை பிரதான வீதியின் திரியாய் சந்தியில் இடம்பெற்ற உந்துருளி விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்தார்.

உயிரிழந்தவர், தம்பலகாமம் பகுதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றிற்கு பணிக்கு செல்வதற்காக மற்றுமொரு பெண்ணுடன் உந்துருளி ஒன்றில் பயணித்துள்ளார்.

குறித்த உந்துருளி வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.