மியன்மாரில் பொதுத்தேர்தலை நடத்த தீர்மானம்!

Vote 2
Vote 2

2023 ஆம் ஆண்டில் மியன்மாரில் பொதுத்தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளதாக அந்தநாட்டின் இராணுவத் தளபதியும் பிரதமருமான மின் ஆங் லயின் தெரிவித்துள்ளார்.

மியன்மாரில் பல கட்சிகளும் பங்கேற்கும் நேர்மையானதும், சுதந்திரமானதுமான தேர்தலை நடத்துவதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள அவசரகால நிலையானது 2023ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் வரையில் அமுலில் இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.