வடமாகாணத்தில் இருந்து ஏனைய மாகாணங்களுக்கான பேருந்து சேவைகள் இன்றைய தினம் மீண்டும் ஆரம்பமாகியுள்ளன.
நாட்டில் நிலவி வந்த கொவிட் 19 தொற்று காரணமாக கடந்த காலங்களில் நாடு முற்றாக முடிக்கப்பட்டதுடன் மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்றையதினம் ஏனைய மாகாணங்களுக்கு செல்வதற்கான பயணத்தடை தளர்த்தப்பட்டதையடுத்து வடமாகாணத்தை சேர்ந்த அரச மற்றும் தனியார் பேருந்துகள் வவுனியாவில் இருந்தும், வவுனியா ஊடாக பயணிப்பதை காணக்கூடியதாக இருந்தது.