கொடிகாமம் பிரதேச வைத்தியசாலையில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை மிகவும் சுறுசுறுப்பாக இடம்பெற்றுவருகிறது.
தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள மக்கள் ஆர்வமாக வருகை தருவதை அவதானிக்க முடிந்தது. அதே வேளை தடுப்பூசி வழங்கும் நிலையங்களை தமது கிராமங்களில் பொது இடத்தில் ஏற்பாடுகளை மேற்கொண்டால் தமக்கு பெற்றுக் கொள்ள முடியும் என மக்கள் தெரிவிக்கின்றனர்.