வவுனியாவில் வழமைக்கு திரும்பிய அரச சேவை

St 6
St 6

கொரோனா காரணமாக கடந்த மூன்று மாதங்களாக முடங்கியிருந்த அரச சேவைகள் இன்று வழமைக்கு திரும்பியுள்ளது.

கடந்த காலங்களில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை காரணமாக அரச உத்தியோகத்தர்கள் சுழற்சி முறையில் பணிக்கு அமர்த்தும் செயற்பாடு அரசினால் முன்னெடுக்கப்பட்டது.

இதனையடுத்து இன்றையதினம் வவுனியா மாவட்டத்திலும் அரச உத்தியோகத்தர்கள் தமது கடமைகளுக்கு மீள் திரும்பியுள்ளதுடன், அரச அலுவலகங்களில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி உத்தியோகத்தர்கள் தமது கடமைகளில் ஈடுபடுவதை அவதானிக்க கூடியதாக இருந்தது.