அனைவரும் தடுப்பூசி போட வேண்டும் – சண்முகநாதன் சிறிபவானந்தராஜா

IMG 6915 scaled 1
IMG 6915 scaled 1

கொரோனாவில் இருந்து பாதுகாப்பதற்கு உரிய வழிமுறைகளை கையாள வேண்டும் என யாழ் போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் வைத்தியர் சண்முகநாதன் சிறிபவானந்தராஜா தெரிவித்துள்ளார்.

யாழ் .போதனா வைத்தியசாலையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே சண்முகநாதன் சிறிபவானந்தராஜா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போதைய சூழ்நிலையில் தடுப்பூசி போடாதவர்கள் தான் அதிகமாக இறப்பினை சந்திக்கின்றார்கள். எனவே பொதுமக்கள் அனைவரும் இந்தத் தடுப்பூசியைப் போடுவதன் மூலம் உயிரிழப்புகளில் இருந்து தம்மைக் காப்பாற்றிக்கொள்ள முடியும்.

அத்தோடு இனிமேல் வைத்தியசாலைக்கு வருவோர் தமக்குரிய தடுப்பூசி அட்டையினை கொண்டு வருதல் மிக அவசியமான ஒன்றாகும். எனவே அனைவரும் இந்த தடுப்பூசியினை பெறுவதன் மூலம் இந்த தொற்றிலிருந்து இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார்.