ருஹூணு பல்கலைக்கழகத்தின் மாணவ தலைவன் உட்பட 19 மாணவர்களின் விளக்கமறியலில்

ruhunu
ruhunu

ருஹூணு பல்கலைக்கழகத்தின் முதலாம் ஆண்டு மாணவர் ஒருவரை கொடூரமான முறையில் பகிடிவதைக்கு உட்படுத்தியமை தொடர்பாக அந்த பல்கலைக்கழகத்தின் மாணவ தலைவன் உட்பட இரண்டாம் ஆண்டில் கல்வி பயிலும் 19 மாணவர்கள் அண்மையில் கைது செய்யப்பட்டனர்.

பகிடிவதைக்கு முகம் கொடுத்த மாணவன், தான் எதிர்நோக்கிய அசம்பாவிதம் தொடர்பான காணொளியை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டதுடன், ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி அவ்விடயங்கள் குறித்து தெரிவித்திருந்தார். அதனடிப்படையில் சந்தேகிக்கப்படும் மாணவர்கள் ஆகஸ்ட் 6 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.

குறித்த மாணவர்களை இன்று நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி இசுரு நெட்டிகுமார முன்னிலைப்படுத்தியப்போதே, எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.