அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் இணைப்பாளர் வசந்த முதலிகே மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத்தின் தலைவர் அமில சந்தீப ஆகியோர் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள், இன்று கடுவெல நீதவான் மஞ்சுல ரத்நாயக்கவின் முன் முன்னிலைப்படுத்தப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அவர்களுடன் கைது செய்யப்பட்ட ஏனைய மூவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
பத்தரமுல்லை பகுதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது, தனிமைப்படுத்தல் விதிகளை மீறல், மஹரகம காவல்நிலைய பொறுப்பதிகாரியை தாக்கியமை போன்ற குற்றச்சாட்டுகளுக்காக அவர்கள் நேற்று கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.