தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத கொழும்பு வாழ் மக்களுக்கான அறிவித்தல்!

jpg
jpg

எந்தவொரு கொரோனா தடுப்பூசியியையேனும், பெற்றுக் கொள்ளாத கொழும்பில் வசிக்கும் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் செயற்பாடு சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில் முன்னெடுக்கப்படுகின்றது.

இன்றைய தினமும் முற்பகல் 9 மணிமுதல் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்படும் என காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

30 வயதுக்கு மேற்பட்டோர் குறித்த பகுதிக்கு சென்று முதலாவது தடுப்பூசியை பெற்றுக் கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.