உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சிறுத்தைப்புலி

1628398461 tiger 02
1628398461 tiger 02

லக்ஸபான கெனியன் நீர்த்தேக்கத்திலிருந்து உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சிறுத்தைப் புலியின் உடலத்தை இரந்தனிகலை மிருக வைத்தியசாலைக்கு பரிசோதனைக்காக கொண்டு செல்லுமாறு ஹட்டன் மாவட்ட நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

எட்டு வயது மதிக்கத்தக்க 6 அடி நீளமும் 3 அடி உயரமுடைய ஆண் சிறுத்தை புலியே மீட்கப்பட்டதாகவும் சிறுத்தைப்புலி நீராடுவதற்கு வந்திருந்த போது தவறி நீர்த்தேக்கத்தில் விழுந்திருக்கலாம் என நல்லத்தண்ணி வன விலங்கு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

கெனியன் நீர்த்தேக்கத்தில் உயிரிழந்த நிலையில் சிறுத்தைப்புலியின் உடலம் ஒன்று மிதப்பதைக் கண்ட இரந்தனிகல நீர்த்தேக்க பொறியியலாளர் நல்லத்தண்ணி வன விலங்கு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அறிவித்ததையடுத்து நேற்று முன்தினம் மாலை (06) நல்லத்தண்ணி வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகளினால் சிறுத்தைப்புலி மீட்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில், ஹட்டன் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிவான் முன்னிலைக்குச் கொண்டு சென்றபோது, இரந்தனிகல மிருக வைத்தியசாலைக்கு சிறுத்தைப்புலியின் உடலத்தை பரிசோதனைக்கு கொண்டு செல்லுமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.