கிரேக்கத்தில் பரவி வரும் காட்டுத்தீ பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளாக அந்த நாட்டு பிரதமர் கவலை வெளியிட்டுள்ளார்.
தொடர்ச்சியாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட தீயணைக்கும் படைத்தரப்பினர் சேவையில் ஈடுபட்டுள்ளனர்.
அத்துடன் மேலும் ஆயிரக்கணக்கான பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்தப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பல புதிய இடங்களில் தீப்பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுவதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.