சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட ஒரு தொகை சிகரெட்டுக்களுடன் நபர் ஒருவர் காவல்துறை விசேட அதிரடி படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
திவுலப்பிட்டி – துன்கஹா பிரதேசத்தை சேர்ந்த 54 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், அவரிடமிருந்து 11,000 சிகரெட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்.
கைப்பற்றப்பட்ட சிகரெட்டுக்களின் பெறுமதி சுமார் 770,000 ரூபாவாக இருக்கலாம் என அவர் மேலும் தெரிவித்தார்.