மாத்தளையின் சில பகுதிகளில் 24 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று (10) காலை 8 மணி முதல் நாளை காலை 8 மணி வரையில் இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உடகம, பலாபத்வெல, தொஸ்தரவத்த, துங்கொலவத்த மற்றும் சமந்தவ நிகவல பிரிவு ஆகிய பகுதிகளில் இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
´விசல் மாத்தளை´ வேலைத்திட்டத்தின் நீர் குழாய் அமைக்கும் நடவடிக்கை காரணமான இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.