வவுனியா, தோணிக்கல் பகுதியில் நேற்று (09) மாலை வீடு ஒன்றில் புகுந்த இளைஞர் குழு வீட்டில் இருந்த தளபாடங்களை உடைத்து சேதப்படுத்தியதுடன், வீட்டாருக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்திவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளரால் வவுனியா காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது சம்பவம் தொடர்பில் வவுனியா காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.