சுதேச கலைகளினதும் கலைஞர்களினதும் மேம்பாட்டிற்காக தனது பதவிக்காலத்தில் முழுமையான அர்ப்பணிப்பினை வழங்குவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.
கலைஞர்களுடனான சந்திப்பின் போது ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.
எமது பாரம்பரியங்களையும் நாட்டின் கலாசாரம் மற்றும் தனித்துவத்தை பாதுகாக்கும் கொள்கையில் அதற்காக திட்டமிட்ட அடிப்படையில் செயற்படுவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
கலைஞர்களுக்கு எதிர்காலத்தில் பல்வேறு வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
கலைஞர்களுக்காக நிருமாணிக்கப்பட்ட ரன்மினித்தென்ன சினிமா கிராமம் கடந்த காலங்களில் உரிய பிரயோசனம் பெறப்படாது கைவிடப்பட்டிருந்தது. சுதேச கலைத்துறையின் முன்னேற்றத்திற்காக அதிலிருந்து பயன்பெறுமாறு ஜனாதிபதி கலைஞர்களிடம் கேட்டுக்கொண்டார்.
பல்வேறு நிறுவனங்களில் தொழில்வாய்ப்புகளுக்காக ஆட்களை தெரிவு செய்யும்போது கலைஞர்களுக்கும் சந்தர்ப்பமளிக்கப்பட்டிருப்பது அவர்களது சேவைகளை மதிக்கும் வகையிலேயே ஆகுமென்றும் ஜனாதிபதி நினைவுகூர்ந்தார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் முன்னணி கலைஞர்களும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.